வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி..!!!
வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு, இடிமின்னல், மண்சரிவு, போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாய்நூயான், டுயான் குயங் போன்ற மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், பல இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் வீதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து வியட்நாமில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில் 75 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளனர். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையிலான கால இடைவெளியில் மட்டும் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .