கழிவறையில் வைத்து 9 வயது சிறுமியை மானபங்கப்படுத்திய நபர்..!! மலேசியாவில் அரங்கேறிய கொடூரம்..!!!
9 வயதுடைய சிறுமி ஒருவரை கழிவறையில் வைத்து மானபங்கப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் சுங்கை பட்டாணியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றின் கழிவறையில் நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் 31 வயதுடைய பீடோங் என்பவர் சிறுமியை மானபங்கப்படுத்தியுள்ளார். அதையடுத்து அவர் தானாகவே முன் வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக குறித்த நபரை குவாலா மூடா பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் துணைத் தலைவர் ஷம்சுடின் கூறியுள்ளார்.
இதற்கு இடையில் அந்த சிறுமியை மானபங்கப் படுத்திய வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த நபரை அடையாளம் கண்டு அவனது வீட்டில் சென்று கைது செய்ய முயன்றனர். ஆனால் இந்த சமபவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவன் தலைமறைவாகியிருந்தான். மேலும் இந்த நிலையில் அந்த நபரே தற்போது வந்து பொலிஸில் சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.