நேற்றைய தினம் அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட இயக்குனர் மணி ரத்னத்தின் தற்போதைய நிலை..!
நேற்றைய தினம் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார். இது தொடர்பாக அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் மணி ரத்னம் அவர்கள் வீடு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்றைய தினம் அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளதால் தற்போது தனது அலுவலக பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
சாதாரண நெஞ்சு வலி தான் ஏற்பட்டதாகவும் அண்மையில் ஏற்படுகின்ற நோயின் பயத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாக தெரிவிக்கப் படுகின்றது.
இயக்குனர் மணி ரத்னம் தற்போது பிரபல நாவலான “பொன்னியின் செல்வம்” கதையை பிரபல நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பலரை வைத்து இயக்கப் போவது குறிப்பிட தக்கது..!