எனது தனிமையை பயன்படுத்தி தனது சுயநலத்திற்கு அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார்..! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..!!
உன்னைச் சரணடைந்தேன் திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளும் நடித்து விட்ட இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட மீரா வாசுதேவனுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்து போனது..
இது பற்றி மீரா அண்மையில் பேட்டி அளித்துள்ளார். சினிமாவின் உச்சத்தில் இருந்த போதே விஷால் அகர்வாலை காதலித்து திருமணம் செய்தேன். அவருக்கு நான் நடிகை மட்டுமே அன்றி பெண் இல்லை. இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அவரை பிரிந்து தனிமையில் இருந்தேன். பின் நண்பராக அறிமுகமான இன்னொருவரை திருமணம் செய்தேன். ஆனால் இந்த திருமணமும் நிலைக்கவில்லை.
அதன் பின் வாழ்க்கையே வெறுத்துப் போனது. பட வாய்ப்புகள் வரவே இல்லை. பின் ஒரு சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டேன் அப்போது தான் அதிர்ந்து போனேன். காரணம் நான் வாய்ப்பு கேட்ட பல இயக்குனர்கள் அவர்கள் எடுக்கும் திரைப்படத்திற்கு என்னை தான் தேர்வு செய்திருந்தனராம். நான் மறுத்ததால் தான் வேறு நடிகைக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறினார்கள்.
நான் அப்படி ஒரு திரைப்படம் கூட மறுக்கவில்லை. நல்ல கதைகள் இல்லாத சில திரைப்படங்களில் நடித்து அவை தோல்வியடைய ஆரம்பித்திருந்தது. அப்போது தான் புரிந்தது. எனக்கு வரும் அத்தனை நல்ல வாய்ப்பையும் நான் நம்பிய மேனேஜர் கெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
என்னை சினிமாவை விட்டு ஓரம்கட்ட நினைத்த மேனேஜர் மோசமான திரைப்படங்கள் வாய்ப்பு பற்றி மட்டுமே எனக்கு கூறி இருந்தார். எனது தனிமையை காரணமாக்கி தனது சுயநலத்திற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது.. உடைந்து போனேன் என கூறியதோடு பெண்கள் எவரையும் நம்ப கூடாது என்பதை உணர்ந்துகொண்டேன் என தெரிவித்துள்ளார். !