இன்றைய ராசி பலன்! 19.01.2020
இன்றைய பஞ்சாங்கம்: 19-01-2020, தை 05, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.51 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.41 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு நிகழும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம்.
கடக ராசி நேயர்களே:
வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே:
வெளிவட்டாரத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கன்னி ராசி காரர்களே:
உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.சிலருக்குக் கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். . உத்தியோகத்தில் அதிகாரிக்கு மிக நெருக்கமாவீர்கள்.
துலாராசி உறவுகளே:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால்பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும்.முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே:
முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபாரம் சுமாராக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது தாமதமாகும்.
நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக கையாளுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
மகர ராசி காரர்களே:
பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள்.பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
கும்ப ராசி உறவுகளே:
பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மீன ராசி நேயர்களே:
வருங்காலத்தைப் பற்றி அதிகமாக யோசிப்பீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். முன்கோபத்தை குறையுங் கள். சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.