நிர்வாணமாக மீட்கப் பட்ட 28 வயது இளம்பெண்ணின் சடலம்..! அடையாளம் காண முடியாமல் தவிக்கும் பொலீஸார்..!!
முகத்தில் அசிட் வீசப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்த இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப் பட்ட சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரை, கஜ்ராலா சிவ் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடதிற்கு வந்த பொலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளனர்.
பொலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணுக்கு 28 வயது இருக்கலாம் என்றும் யாரேனும் ஒருவர் அல்லது சிலரால் பழத்தோட்டத்திற்கு அழைத்து வந்து சுட்டுக் கொலை செய்து விட்டு முகம் அடையாளம் தெரியாமல் இருக்க அசிட் ஊற்றி எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெண்ணின் உடலில் துணி இருக்கவில்லை என்றும் அதனால் சில வேலை கற்பழிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இது வரை பெண்ணை அடையாளம் காண முடியவில்லை என பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்..!!