“திருமணத்திற்கு முன் வேறு ஆணிடம் கற்பை இழந்துவிட்டேன்” திருமணம் முடித்து சில நிமிடத்தில் “மெளனம் பேசியதே” திரைப்பட நடிகை அதிரடி…!!
” Pyaar Koi Khel Nahin” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நேஹா பெண்ட்சே. சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இருப்பினும் படங்கள் பெரிதாக பேசப் படவில்லை. கதாநாயகியாக நடித்த படமும் தோல்வியை தழுவியது.இருப்பினும் வாய்ப்புகள் குறையவில்லை மராத்தி ,ஹிந்தி மலையாளம்,கன்னடம் என நடித்தார்.
அத்துடன் தமிழில் சூர்யா திரிஷா ஜோடியாக நடித்த மெளனம் பேசியதே திரைப்படத்தில் மஹாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு திரைப்படங்களில் மட்டும் தான் ராசி இல்லை சீரியல்கள் எல்லாமே அசத்தல் தான். அது மட்டும் இன்றி பிக் பாஸ் சீசன் 12 ல் கலந்து கொண்டு நான்காவது வாரம் வெளியேறினார்.
இந்த நிலையில் 35 வயதாகும் நேஹா shardul Singh bayas என்பவரை நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்தில் ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. காரணம் ஷர்துல் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து 2 குழந்தைகளும் உள்ளனர்.
இப்படியான ஒருவரை நேஹா திருமணம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த நேஹா: ஷர்த்துல் திருமணம் செய்து விவாகரத்தானவர், அவரது மனைவிகள் வேறு திருமணம் செய்துவிட்டனர். அதன் பின் தான் நான் திருமணம் செய்கிறேன்.
அவர் முறைப்படி உறவில் இருந்தவர். நானும் ஏற்கனவே கற்பை இழந்தவள் தான். பலருடன் உறவில் இருந்தேன், அவர்கள் உடலை நேசித்ததால் பிரிந்துவிட்டேன். எனக்கும் ஷர்துலுக்கும் இதில் பிரச்சை இல்லை என்றால் உங்களுக்கு என்ன என கேட்டுள்ளார்…!