ருவிட்டர் பாவனையாளர்களுக்கு பணத்தை அள்ளி இறைக்கும ஜப்பானியர்!
ஜப்பானைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தனது ருவிட்டர் பக்கத்தில் ரீருவீட் செய்தவர்களுக்குப் பணத்தை அள்ளி இறைக்கவுள்ளார்.
அதாவது, தனது ருவிட்டர் பக்கத்தில் ரீருவீட் செய்தவர்களில் ஆயிரம் பேரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு சுமார் 9 இலட்சத்து 35 ஆயிரம் அமெரிக்க டொலரை பரிசாக வழங்கவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அவர், “பணம் எப்படி மனிதர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பது குறித்து பதிவிட்டார்.
அதில், தன்னைப் பின் தொடர்பவர்களுக்கு ரீருவீட் செய்தால், குறிப்பிட்ட சிலருக்கு பணப் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதில் ஆயிரம் பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பணப்பரிசு வழங்கவுள்ளார்.