34 வயது பெண்ணின் பிறப்பு உருப்பில் இரும்பு கம்பியால் குத்தி நடந்த கொடூர சம்பவம்.! நடு வீதியில் நிர்வாணமாக உயிருக்கு போராடிய பெண்.!!
34 வயது பெண் ஒருவரின் பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் ஒன்று அதிரவைத்துள்ளது. மும்பை கைராணி சாலையில் இளம் பெண் ஒருவரை நிர்வாணமாக நபர் ஒருவர் தாக்குவதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலீஸார் சென்ற போது நிர்வாண கோலத்தில் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக பெண்ணை மீட்ட பொலீஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை இடம்பெற்று வருகின்றது. உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறியுள்ள நிலையில், முதல் கட்ட பரிசோதனையில் குறித்த பெண்ணின் பிறப்பு உறுப்பு கொடூரமாக பாதிக்கப் பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தியுள்ளதாகவும் இதனால் பிறப்பு உறுப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில் சாலையில் வைத்து பெண்ணை தாக்கிய நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு பொலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப் பட்டவர் மோகன் சவுகான் என்கிற 35 வயது நபர் என்பது தெரிய வந்துள்ளது. குறித்த பெண்ணை Van ஒன்றில் ஏற்றி வந்துள்ளார். வீதியில் வாகனம் நிறுத்தப் பட்ட போது குறித்த பெண் தப்பி ஓட முயன்ற போதே பொலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருவரும் யார் ஏன் இந்த கொலை முயற்சி என்பது குறித்த பெண் உயிருடன் வந்தால் மட்டுமே தெரியும். இதே போல் இரு சம்பவம் 2012ம் டெல்லியின் நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவிக்கு நடந்ததும் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைத்ததும் குறிப்பிட தக்க விடயமாகும்.!