பெப்ஸி தொழிலாளர்களுக்காக நடிகை நயன்தாரா வழங்கிய நன்கொடை.! சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து அதிக பணம் கொடுத்தது நயன் தான்..!!
ஒட்டுமொத்த உலகமும் கொரொனா வைரஸால் தடுமாறி வருகிறது. பல நாடுகள் முற்றாக முடங்கிவிட்டது. நாடுகள் முடங்கியதால் பல கோடி மக்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற மன உளைச்சலில் தான் இன்று பலர் வாழ்கின்றனர்.
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு சட்டம் போடப் பட்டுள்ள நிலையில் அன்றாடம் உழைந்து வாழ்ந்து வந்த மக்கள் சிரமபடுகின்றனர். என்ன தான் அரசு உதவினாலும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் இந்தியாவில் பெப்ஸி தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். இவர்களுக்கு நடிக நடிகைகள் உதவி வரும் நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் பெப்ஸி தொழிலாளர்களுக்காக சுமார் 20 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு பிறகு பெப்ஸி தொழிலாளர்களுக்காக அதிக தொகை வழங்கியது நடிகை நயன்தாரா என்பது குறிப்பிட தக்கது…!