உப்பு தண்ணீர் பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் அழியுமா.? உண்மை இது தான்..!!
கொரோனா வைரஸின் வேகம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்தோ, அழிக்கும் மருந்தோ இன்னும் மக்கள் பாவனைக்கு வரவில்லை, அதனால் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் படியும் எந்த எந்த உணவுகளில் நோயெதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் அனைவரும் கூறி வருகின்றோம்.
இந்த நிலையில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் உணவுகள் கொரொனா வைரஸை அழிக்கும் என சிலர் தவறான செய்திகளை பகிர்கின்றனர். அது முற்றிலும் தவறான ஒன்றாகும். குறிப்பாக பூண்டு கொரொனாவை அழிப்பதாக சிலர் செய்தி பரப்பியுள்ளனர். அது தவறானதாகும். பூண்டு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களை கொரொனா வைரஸ் தாக்கும் வேகம் குறைவு அவ்வளவு தான். அடுத்து அடிக்கடி கை கழுவும் படியும், சுடு நீரில் உப்பு கலந்து தொண்டை வரை கழுவும் படி கழுவும் படியும் வைத்தியர்கள் கூறி வருகின்றனர்.கையில் இருக்கும் கொரொனாவை சோப் அழிப்பதாகவும் தொண்டை மற்றும் உடலில் இருக்கும் கொரோனாவை உப்பு நீர் அழிப்பதாகவும் செய்திகள் வைரலானது.
இது முற்றிலும் தவறாகும் கொரொனா உப்பு தண்ணீரியில் அழியும் வைரஸ் அல்ல. இதனை அழிக்கும் மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. மக்கள் வதந்தியகளை நம்பாதீர்கள். உப்பு நீர் கிருமிகளை அழிக்க கூடியது தான் கொரோனா வைரஸை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தற்போது வதந்திகள் வேகமாக பரவ கூடியது..அதனால் எச்சரிக்கையாக இருங்கள்…!!