“புன்னகை மன்னன்” திரைப்படத்தில் போல் பரிதாபமாக உயிர் இழந்த காதலன்.! தப்பித்த காதலி சொன்ன காரணம்.!!
கமலஹாசன், ரேகா,மற்றும் ரேவதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்.”புன்னகை மன்னன்” இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ரேகா உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் குடும்பத்தில் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் இருவரும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பார்கள் இதில் ரேகா இறந்துவிட கமலஹாசன் தப்பித்துக் கொள்வார்.
இதன் பின் நடக்கும் விடயங்களே திரைப்படமாக்கப் பட்டிருந்தது. இதே திரைப்பட பாணியில் காதலி தப்பிக் கொள்ள அப்பாவித் தனமாக இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..கேரளாவில் இடுக்கி அருகே உள்ள மரயூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா.
குடும்பத்தில் செல்லப் பிள்ளையான இவர் பக்கத்து ஊரான பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார், இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலனான நாதிர்ஷா தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் நிகிலா தற்கொலை எண்ணம் வேண்டாம், பேசி சம்மதிக்க வைக்கலாம் என எவ்வளவோ கூறியுள்ளார்.
ஆனால் உன்னை பிரித்து விடுவார்கள் அதனால் வா சாகலாம் என கூறியுள்ளார். இருவரும் தற்கொலை செய்துகொள்ள மலை பகுதிக்கு சென்றுள்ளனர். குதித்து சில நேரம் தப்பித்துவிட வாய்ப்பு உள்ளதென கூறி நாதிர்ஷா கைகளை அறுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். வேண்டாம் என நிகிலா எடுத்துச் சொன்ன போதும் கேட்காமல் தனது கையை அறுத்து கொண்டதுடன் நிகிலாவின் கையையும் அறுத்துள்ளார்.
நிகிலா பயத்தில் செய்வதறியாது திகைத்து நிற்க நிகிலாவின் கையை பிடித்த படி மலையில் இருந்து குதிக்க முயன்றுள்ளார். நிகிலா கையை எடுத்துக் கொள்ள நாதிர்ஷா மலையில் இருந்து கீழே விழுந்துள்ளார். நிகிலா உடனடியாக ஆம்பியுலன்ஸ்க்கு கால் செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போது நாதிர்ஷா சடலமாக மீட்கப் பட்டதுடன் கையை அறுத்து அதிக இரத்தம் போனதால் உயிருக்கு போராடும் நிலையில் நிகிலாவும் மீட்கப் பட்டுள்ளார்..தற்போது நிகிலா குணமாகி உள்ள நிலையில் நாதிர்ஷாவின் மரணம் பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது!