பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை செய்துகொண்டது ஏன்..? வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!
யுவ கலா பாரதி, இன்னிசை மாமணி, நாத பூசணம், சுந்தர வினோதினி, பால ரத்னா, கானமிருத வாணி, சங்கீதா சிகாமணி, கலைமாமணி, இசை பேரொளி, இசை மணி மகுடம், தமிழிசை வாணி, இசை கலை தாரகை, மட்டும் இன்றி இசையில் எத்தனை விருதுகள் உள்ளதோ அத்தனை விருதுகளுக்கும் சொந்தக்காரியான நித்யஸ்ரீ மஹாதேவன் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம்.
சிவகுமார், லலிதா தம்பதிகளின் மகளான நித்யஸ்ரீ இசை மூத்த இசை குடும்பத்தின் வாரிசாவார். Dk பட்டம்மாள், DK ஜெயராமன் இருவரும் நித்யஸ்ரீயின் தாத்தா, பாட்டியாவார்கள், பாபநாசம் சிவன், பால்காட் மணி ஐயர், லாவண்யா சுப்ரமணியம், என மிகப் பெரிய மியூஸிக் குடும்பத்தின் வாரிசான நித்யஸ்ரீயின் திருமண வாழ்க்கை தான் கேள்விக் குறியாகி போனது.
மெக்கானிக்கல் எஞ்சினியர் மஹாதேவன் அவர்களை திருமணம் செய்த நித்யஸ்ரீக்கு தனுஸ்ரீ மற்றும் தேஜஸ்ரீ என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான பின்பும் தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்த மஹாதேவன் தனது தாயின் திடீர் உடல் நலக் குறைவால் ஏற்பட்ட மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் மனைவி மகள்களை மறந்து மனதளவில் பாதிக்கப் பட்ட நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அடையாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதன் பின் ஏராளமான போராட்டத்தின் பின் தனது மகள்களுடன் வாழ்ந்துவருகிறார். காசு பணம், புகழ் எல்லாம் நிறைந்துள்ள நித்யஸ்ரீயின் வாழ்க்கை தன் கணவரின்றி இன்றளவும் கண்ணீரில் நகர்வதாக தெரிவித்துள்ளார்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.