தலை மொட்டையடித்து கவலையான நிலையில் நடிகை பரவை முனியம்மா..! நேரில் சென்று புகைப்படம் வெளியிட்ட நடிகர்…!!
நாட்டுப் புற பாடல்களில் கலக்கியவர் நடிகை பரவை முனியம்மா. மேடை நிகழ்ச்சிகள் கோயில்களில் பாடி மக்களிடம் அதிகம் பேசப் பட்ட பரவை முனியம்மாவிற்கு குங்குமம் சீரியலில் தொடங்கப் பாடலை பாடி ஆட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவிற்குள் கால் பதித்த இவர் ஏராளமான திரைப்படங்களில் அம்மாவாக, பாட்டியாக நடித்ததுடன் பல பாடல்களையும் பாடி மக்களை மகிழ்வித்தார்.
இந்த நிலையில் பரவை முனியம்மாவின் கணவர் திடீரென மரணமடைந்துவிட மனமுடைந்த அவர் வீட்டிலேயே இருந்தார். இதனால் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.ஜெயலலிதா அவர்கள் உதவிக் தொகையாக 2 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பு செய்தார். அதன் வட்டி மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் பரவை முனியம்மாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது.
இருப்பினும் இந்த பணம் மருத்துவ செலவிற்கு போதாது என அவரது மருமகள் கூறி இருந்தார். பலரும் இவரை மறந்த நேரத்தில் நடிகர் அபி சரவணன் அவர்கள் பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து உதவி வழங்கியுள்ளார். உணவு பொருட்கள், உடைகளை வழகியதுடன் மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பரவை முனியம்மா பாட்டியின் நிலை மொட்டையடிக்கப் பட்டிருப்பதும் புகைப்படத்தில் தெரிகிறது. உதவி வழங்கிய பின்னர் அபி சரவணன் தெரிவிக்கையில் முடிந்தவர்கள் சிறிய அளவில் உதவினால் கூட அது அவர்களுக்கு பெரிதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்..