இப்படி புதுமையை விரும்புவார்கள் மக்கள்.. செமயா யோசிக்கிறாங்க!!
மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு சிலர் வித்தியாசமான முறையில் தீர்வு காணமுயற்சித்துள்ளார்கள். அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். சீனா பூங்காவில் உள்ள இரண்டு வளர்ப்பு டொல்பீன்கள் எதிர்பாராமல் பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கிவிட்;டது. அந்த பொருட்கள் உணவுக்குழாயில் சிக்கியுள்ளது.
இதற்கு தீர்வு காண்பதற்கு விலங்கு மருத்துவர்களை அழைப்பதற்கு பதிலாக சீனாவைச் சேர்ந்த மிக உயரமான மனிதரை வரவழைத்து அவரின் 3 1/2 அடி நீளமான கைகளை உள்ளே விட்டு அந்த பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துள்ளார்கள். இதனால் டொல்பின்களும் பாதுகாப்புடன் இருந்ததாம்.
சீனாவில் தர்ப்பூசனிகள் விளையும் போது அவற்றை சதுர வடிவிலான பெட்டியால் அடைத்து தர்ப்பூசனியின் வடிவத்தை சதுர வடிவமாக மாற்றியுள்ளார்களாம். இதற்கும் நாம் வழமையாக சாப்பிடும் தர்ப்பூசணிக்கும் வித்தியாசம் இல்லையாம்.
பொதுவாக மனிதர்கள் புதுமையான விசயங்களை விரும்புவார்கள் என்கதால் இந்த தர்ப்பூசனியை இப்படி விற்கிறார்கள். இதன் விலையை 10000 க்கு விற்றாலும் அதை வாங்குபவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். மேலும் அறிய வீடியோவைப் பார்க்கவும்..