பொள்ளாச்சி தொடர் கற்பழிப்பு விடயம் தற்போது பேசப் பட்டுக் கொண்டிருகின்றது. இதனால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருகின்றார்கள். பெரும்பாலான மாணவிகள் விடுதிகளில் தங்கி படிகின்றனர். இவர்களது பெற்றோர்கள் துடித்துப் போய் உள்ளனர். இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த மாணவி ஒருவர் தனக்கு நடந்த மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்துள்ளார். எனது அம்மா, அப்பா உறவுகளை விட்டு தனியாக விடுதியில் தங்கி படிக்கிறேன். பொள்ளாச்சி விடயத்தை பற்றி கேள்வி பட்டதும் அம்மா எனக்கு கால் செய்தார்.
அம்மா இப்போது அழுதபடி அட்வைஸ் செய்யப் போகிறார் என்று நினைத்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அம்மா பேசியது.. என் அம்மா சொன்னது இது தான். இந்த ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் தனித்து நின்று உன்னை பாதுகாத்துக் கொள்ளும் தைரியத்தை நானும் அப்பாவும் உனக்கு கொடுத்து இருக்கிறோம்.
நீ பாதுகாப்பாக இருப்பாய் என நம்புகிறோம். எமக்கு தெரியும் நீ தைரியமானவள். ஆனாலும் பெற்றோராக உனக்கு ஒன்று சொல்கிறோம். உன் புகைப்படங்கள், வீடியோக்கள், ஏதாவது தவறாக பயன்படுத்துவோம் என யாராவது மிரட்டினால் நீ பயப்படாதே “உடல் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் விடயம்
இதில் வெக்கப் படவோ கேவலம் என நினைக்கவோ ஒன்றும் இல்லை, எம்மை அறியாது தவறு நடந்தால் பெற்றோரிடம் கண்டிப்பாக பகிர்ந்துகொள். கண்டிப்பாக உன் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ள நாம் இருகிந்தோம் என அம்மா கூறிய நொடி அவரை அணைத்து கத்தி அழ வேண்டும் போல் இருந்தது..
எந்த ஜென்மத்திலும் தவறு செய்துவிட கூடாது என்ற எண்ணமும் வந்துவிட்டது. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதனை சொல்லுங்கள்.உங்கள் பிள்ளைகள் தங்களுக்கு நடந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”