25 வயது யுவதியின் அதிரடி செயல். குவியும் பாராட்டுக்கள்..!!
தாய்க்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் பற்றி சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் பகிர்ந்திருந்தோம், அவர் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பூஜா (பெயர் மாற்றம்) என்ற 25 வயதான யுவதி தன் நீண்ட நாள் காதலரை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்கு அனுமதி பெற்றார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்வதற்கு திகதி குறிக்கப் பட்டது. இந்த நிலையில் இவரது தயாருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென வைத்தியர்கள் கூற செய்வதறியாது குடும்பமே திகைத்தது. சிறு நீரக கொடையாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. தாயின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. இதனால் தனது சிறு நீரகத்தை தானம் செய்த முடிவு செய்தார். தனது காதலனுடன் இது குறித்து பேசிய போது சிறு நீரக தானம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என காதலர் கூறிவிட
மனமுடைந்த யுவதி அம்மா போதும் காதல் வேண்டாம் என நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார். பின் தன் அம்மாவிற்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்துவிட அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. தாய் மற்றும் மகள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.