மூத்த மனைவியை நான் மட்டும் தான் விவாகரத்து செய்தேன்” மனம் திறந்த நடிகர் பிரகாஷ் ராஜ்..!
வில்லனாக குணச்சித்திர நடிகராக ஹீரோவாக சினிமாவில் தனது நடிப்பை வெளிபடுத்தியவர் நடிகர் பிரகாஷ். “செல்லம்” இந்த வார்த்தையை எவ்வளவு அழகாக நாம் கூப்பிட்டாலும் செல்லோம் என மாற்றிவிட்ட பெருமை இவரையே சேரும். எந்த ஒரு வில்லன் நடிகராலும் இவரது இடத்தை நிரப்பிவிட முடியாது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரகாஷ் ராஜ் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இருப்பினும் தனது சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது இரண்டாவது திருமணம் பற்றி பேசியுள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பேசி பிரிய இருவரும் முடிவெடுத்தோம். அதன் பின் நான் போனி வர்மாவை கூட்டி வந்து இவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றேன். எனது மூத்த மகளுக்கு போனி வர்மாவை பிடித்து போனது. ஆனால் அம்மாவோ அழ ஆரம்பித்து விட்டார்.
என் பிள்ளைகள் போனி வர்மாவை ஏற்றுக் கொண்ட பின் இரண்டாவது திருமணம் பற்றி என் வீட்டினருக்கு புரிய வைக்க அதிகம் கஷ்டப் பட்டேன்.
என் மூத்த மனைவியை நான் மட்டும் தான் விவாகரத்து செய்துள்ளேன். எனது அம்மாவிற்கு அவர் தான் இன்னும் மருமகள். ஆனால் என் மூத்த மனைவி மற்றும் இரண்டாவது மனைவி இருவரும் குழந்தைகளுக்காக நல்ல தோழிகள் ஆகியுள்ளனர். என்கிறார் பிரகாஷ் ராஜ்..!