சென்னை “பலரை வாழவைக்கும் இடம்” என்னடா இப்படி சொல்றேன் என்று பார்க்கிறீங்களா? நிஜம் தானே நீங்களே சொல்லுங்க. தமிழ் நாட்டில் அனைவராலும் அதிகம் நேசிக்கக் கூடிய இடம் என்றால் அது சென்னை தான். வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்த பலரை, இல்லை நீ பலரை வாழ வைப்பாய் என தூக்கி நிறுத்தியதும் சென்னை தான் என் வாழ்க்கை முடிந்துவிட்டதென எமக்கும் பிடித்த சிலர் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதும் சென்னையில் தான். திடீரென சென்னையின் புகழ் பாடுகிறேனே இதற்கான காரணம் என்ன என நீங்கள் யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள்.
இல்லை சென்னையில் நடக்கும் நல்ல விடயங்களை பற்றி பேசவல்ல இது அங்கு நடக்கும் அசிங்கங்களை பற்றி பேசவே இந்த பதிவு. தமிழன் டா நாங்கள் இது எங்கள் ராஜ்யம் என உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் கெத்தை பார்த்த நாம்
நள்ளிரவில் தெருவோரங்களில் நம் இளைஞர்களின் செயலால் செத்துப் போனோம் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு யூடியூப் சேனலை சேர்ந்த இளைஞர்கள் சென்னையில் நள்ளிரவில் என்ன நடக்கிறதை என்பதை வீடியோ செய்து இருக்கின்றனர்.
அதில் இருக்கும் கேவலமான விடயங்களை பார்க்கும் போது ஒரு நிமிடம் இது எம் சென்னையா என கேட்க தோன்றுகிறது. எங்குமே விபச்சாரம். தெருவோரங்களில் நிக்கும் திருநங்கைகளை அனைத்த படி எம் இளைஞர்கள். பேரம் பேசிக்கொண்டிருக்கும் திருநங்கைகள்.
ஆங்காங்கே பொலீஸ் வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தாலும் நடு வீதியிலேயே விபச்சாரம். சென்னையில் நள்ளிரவில் இப்படியா நடக்கிறது என வியக்க வைக்கிறது. வாழ வைக்கும் சென்னை தான் பலரின் வாழ்க்கையை முடித்தும் வைக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.!