கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற இளம் பெண் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்…!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (26 வயது) கடந்த 23 ஆம் திகதி தலை கல்லால் நசுக்கப்பட்ட நிலையில் கிணமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் மணிவண்ணனை யாரோ திட்டமிட்டு தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆனால் இக் கொலைச் சம்பவத்தில் இறந்த மணிவண்ணனின் மனைவி மிகவும் உருக்கமாக அழுது கணவன் இல்லாத நிலையில் தானும் இறந்துவிடுவேன் என்று நாடகமாடியதால் ஆரம்பத்தில் பொலிசாருக்கும் மனைவி காயத்திரிதேவி மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கவில்லை.
எனினும் வேறு சந்தேகத்திற்கிடமான தடயங்கள் கிடைக்காததால் பொலிசார் மனைவி காயத்திரிமீது தமது தீவிர விசாணையை முன்னெடுத்துள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் காயத்திரிதேவி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
காயத்திரிதேவி கமலக்கண்ணன் என்பவரைக் காதலித்ததாகவும் தமது காதலுக்கு கணவன் மணிவண்ணன் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் காதலன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன்குமார் ஆகியோருடைய உதவியுடன் மணிவண்ணனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மணிவண்ணனைக் கொலை செய்ய முயற்சித்தபோது தன் மனைவியிடம் தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சியதாகவும் ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் அவரைக் கொலைசெய்ததாகவும் காயத்திரிதேவி மிகவும் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”