மிரட்டும் அமெரிக்கா – வழமையான சந்திப்புக்காக இந்தியா வருகின்ற ரஸ்ய அதிபர்
இந்தியா – ரஸ்யாவுக்கிடையிலான இருதரப்பு வருடாந்திர சந்திப்புக்காக ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று இந்தியா வருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா தனது வழமையான பாணியில் தனது நட்பு நாடுகளை அச்சுறுத்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. ரஸ்யாமீது ஏற்கனவே அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் தனது நட்பு நாடுகளும் ரஸ்யாவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இவ் எச்சரிக்கையை மீறிச் செயற்படும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அறிவிப்பொன்றை அமெரிக்கா விடுத்துள்ளது. எனினும் இவ்விடயம் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாத இந்தியா தனது வழமையான சந்திப்பு நடவடிக்கையில் ரஸ்யாவுடன் ஈடுபட்டுள்ளது. அத்தோடு இன்றைய இந்திய வருகையின் போது அதிபர் புட்டினுடன் எஸ்-400 வகை ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் இடம்பெறலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றை விடவும் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை போன்ற விடயங்களும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகின்றது. இது இவ்வாறிருக்க இந்தியா பற்றிய அண்மையில் அமெரிக்க அதிபர் குறிப்பிடும்போது இந்தியா தம்மை மகிழ்ச்சிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”