பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ரேஷ்மா கலந்துகொள்ளாததற்கு உண்மையான காரணம் இது தானாம்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து விட்டது.. நேற்றைக்கு முன் தினம் பிக் பாஸ் கொண்டாட்டமும் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொள்ளவில்லை.சரவணன், மீரா மிதுன், மதுமிதா, இவர்களுடன் ரேஷ்மாவும் இணைந்துகொண்டார்.
சரவணன் மற்றும் மதுமிதாவை விஜய் டிவி வெளியேற்றியது..இதனால் விஜய் டிவியின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என கூறி திரைப்பட வேலைகளில் சரவணன் பிஸியாக இருக்கிறார். அதே போல் மதுமிதாவும் தனக்கு அநியாயம் நடந்ததால் கலந்துகொள்ள மாட்டேன் என ஒதுங்கிவிட்டார்.
மீரா மிதுன் வழமை போல் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் தனக்கு விஜய் டிவி பணம் கொடுக்கவில்லை என்று செல்லவில்லை, ஆனால் இந்த ஒரு காரணம் கூட இல்லாமல் ஏன் ரேஷ்மா கலந்துகொள்ளவில்லை என பலரும் கேட்டுவந்த நிலையில் அதற்கான பதிலை ரேஷ்மாவே கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது பிஸி சூட் பற்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் மணிராம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் ரேஷ்மாவிற்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் குவிந்துள்ளது குறிப்பிட தக்கது..!!