அலுவலகத்தில் வைத்து துடிக்க துடிக்க பெற்றோல் ஊற்றி கொலை செய்யப் பட்ட பெண் தாசில்தார்..! வெளியான காரணம்…!!
பெண் தாசில்தார் ஒருவரை அவரது அலுவலகத்தில் இருக்கும் போது தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா ஹயந்தாரை என்ற இடத்தை சேர்ந்த பெண் தாசில்தாரான விஜயா ரெட்டி என்பவரே இவ்வாறு எரித்துக் கொள்ளப்பட்டார். தாசில்தாரை சந்திக்க வந்த சுரேஷ் என்ற நபர் மதியம் 1.40 மணியளவில் விஜயா ரெட்டியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
திடீரென விஜயா ரெட்டி உதவி கேட்டு கதறியுள்ளார். கதறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாசில்தாரின் டரைவர் மற்றும் உதவியாளர் அதிர்ந்துள்ளனர். விஜயா தீ பற்றி எரிந்துகொண்டு இருந்துள்ளார். இருவரும் விஜயாவை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போக சம்பவ இடத்திலேயே உடல் கருகி விஜயா உயிரிழந்தார்.
இது தொடர்பாக உடனடியாக பொலீஸாருக்கு அறிவிக்கப் பட்டதை சடலத்தை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் கையில் தீக் காயங்களுடன் பொலீஸில் சரணடைந்துள்ளார். தீ வைத்து கொலை செய்தது பற்றி சுரேஷ் பொலீஸாருக்கு கூறியதாவது..
பச்சரம் கிராமத்தில் சுரேஷுக்கு 7 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் நிலத்தில் பிரச்சனை இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாகும் .. சில நேரம் இந்த வழக்கு விஜயாவிற்கு சாதகமாக போகலாம் என நினைத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் விஜயா தாசில்தார் என்பதால் சுரேஷுக்கு அநீதி நடக்கிறது..அதனால் தான் பெற்றோலை எடுத்துச் சென்றேன்..
வழக்கில் இருந்து விலகும் படி கூறினேன் மறுத்ததால் பெற்றோலை ஊற்றி தீ வைத்தேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த பிரதேசத்தை பரபரப்பாக்கியுள்ளதுடன், அரச ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தாசில்தார், அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படி அவர்கள் மேலும் கூறியுள்ளனர்..!!