” என்னை 6 முறை கொலை செய்து விட்டார்கள் ” பாடகி ஜானகி” அம்மா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!!
” ஜானகி அம்மா ” இந்த குரலில் மயங்காத எந்த இதயமும் இருக்க முடியாது. மகுடிக்கு பாம்பு மயங்குமோ இல்லையோ இவரது குரல் காட்டும் வித்தைக்கு மயங்காதவர்கள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். 48 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள், விருதுகளே வியக்கும் அளவு விருதுகள் இருந்தும் எளிமை,
இனிமை இப்படியும் இருவர் இருப்பாரா என்று வியக்க வைக்கும். ஜானகி அம்மா பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். இந்த நிலையில் நேற்றைய தினம் ஜானகி அம்மா இறந்து விட்டதாக செய்திகள் வைரலானது.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் அது பொய்யான தகவல் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சிறிய சத்திர சிகிச்சை நடந்தது, அம்மா தற்போது நலமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில் ஜானகி அம்மாவிடம் பேசிய போது நான் நலமாக தான் இருக்கிறேன், ஆனால் என்னை ஆறு முறை கொலை செய்துவிட்டார்கள். என கிண்டலடித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது..!!