உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்களை வைக்காதீர்கள்…இருந்தால் அகற்றி விடுங்கள்..!!
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கான பதிவு இது. பொதுவாக இந்துக்கள் அனைவரின் வீடுகளிலும் பூஜை அறைகள் ஒதுக்கப் பட்டு சுவாமி படங்கள் வைக்கப் பட்டிருக்கும் இது வழமையாக அனைவரின் வீட்டிலும் நடக்கும். அன்றாடம் இறை வழிபாட்டை வீட்டில் நடத்துவதே சிறந்தது என எமது முன்னோர்களும் கூறுவது அறிந்ததால் இன்றுவரை வீடுகளிலேயே வழிபாடு நடக்கும்.
ஆனால் நாம் வீட்டில் எந்த எந்த இறைவனை வைத்து வழி படுகின்றோம். ? யாரை வைத்து வழிபட வேண்டும் இது பெரும்பாலானோருக்கு தெரியாத விடயமாக உள்ளது அதனால் இன்று எந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடலாம் வழிபட கூடாது என இந்த பதிவின் மூலம் காண்போம்.
முதலில் பூஜை அறையில் இருக்கக் கூடாத புகைப்படங்களை பார்க்கலாம், சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் புகைப்படங்கள் வைக்கவே கூடாது, அதே போல் அகோரமாக இருக்கும் எந்த ஒரு புகைப்படங்களும் பூஜை அறையில் வைக்க கூடாது, குறிப்பாக உக்ரமாக இருக்கும் காளி புகைப்படங்கள், அதே போல் மொட்டையாக இருக்கும் சாமி புகைப்படங்கள் போன்றவை எக் காரணத்திற்காகவும் பூஜை அறையில் வைக்காதீர்கள்.
காரணம் அதிகாலையில் நீங்கள் பூஜையில் அமரும் போது மனதிற்கு அமையும் வீட்டிற்கு சுபீட்சமும் கிடைக்க இறைவனின் புகைப்படங்களே தொடக்கமாக அமைகிறது.சரஸ்வதி, லட்சுமி நாராயணன், சிவன் சக்தி, முருகன்,பிள்ளையார் என அமைதியான புகைப்படங்களை வையுங்கள்.