தாலி கட்டி சில மணி நேரத்தில் துடிதுடித்து இறந்த மணமகன்.! தாலியில் வைக்கப் பட்ட குங்குமம் கூட காயாத நிலையில் கதறி அழும் மணப்பெண்.!! மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!
திருச்சி சமயபுரம் பகுதியில் வசித்து வந்த 27 வயதான இளைஞர் ஒருவர் திருமணமாகி சில மணி நேரத்தில் மரணமடைந்த விடயம் இரு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த 27 வயதான விக்னேஷ்வரன் என்ற 27 வயது இளைஞனுக்கு சாயல்குடி கடுகு சந்தையை சேர்ந்த யுவதி ஒருவரை பெற்றோர் திருமண நிச்சயம் செய்தனர்.
பெப்ரவரி 24ம் திகதி காலை 10.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் முறைப்படி மணமகள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு சடங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி என கூறிய விக்னேஷ்வரன் மயங்கிவிழுந்தார்.
உடனடியாக சாயல்குடி வைத்தியசாலை அழைத்துச் சென்ற போது விக்னேஷ்வரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரமாக திருமண வேலைகளில் கஷ்டப் பட்ட விக்னேஷ்வரன் திருமண நாளில் மிக சோர்வாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகி தாலியில் வைக்கப் பட்ட குங்குமத்தின் ஈரம் கூட காயும்முன் மணமகன் இறந்து போனது ஊர் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.!!