பல நாடுகள் தீவிர வாதத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் இப்போது புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. பிரிட்டனில் இருந்து 2015ம் ஆண்டு மூன்று கல்லூரி மாணவிகள் ஐ எஸ் ஐ எஸ் தீவிர வாத இயக்கத்தில் சேர்வதற்காக தப்பிச் சென்றனர். அது பிரிட்டனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் அந்த பெண்கள் நாட்டிற்குள் வர தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் ஐஎஸ் ஐஎஸ் தீவிர வாத பயிற்சி பெற்றபின் சமீமா பேகம் என்ற பெண் பிரிட்டன் திரும்ப அனுமதி கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீமா பேகம் மற்றும் இருவர் அங்கு சென்று தீவிர வாத பயிற்சி பெற்ற நிலையில்
சிரியாவில் வைத்தே அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. இப்போது மூன்றாவது குழந்தையை பெற்றுள்ள சமீமா பேகம் பிரிட்டன் திரும்ப ஆசை படுவதாக பிரிட்டனில் இருக்கும் தாய் தந்தையருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் மூலம் சமீமா பேகத்தின் தாய் தந்தையினர் சமீமா நாடு திரும்ப அனுமதி அளிக்குமாறு நீதி மன்றத்திடம் வேண்டியுள்ளனர்.தான் ஐ எஸ் ஐ எஸ் சென்றது பற்றியோ அதற்காக வருந்துவதாகவோ அல்லது மன்னிப்பு கேட்கவே இல்லை என்பதால் பிரிட்டனில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே தீவிர வாத இயக்கங்கள் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க இந்த பெண் எந்த நோக்கத்தில் நாட்டிற்குள் நுழைய விரும்புகிறாள் என மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்..!
நாட்டை விட்டு தப்பி ஓடி ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற பெண் மீண்டும் நாடு திரும்ப விருப்பம்…! மீண்டும் பரபரப்பு ..! இதோ அவர் பேசிய வீடியோ ..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”