கர்ப்பமாக இருக்கும் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்கள்..! பிரபல நடிகை குற்றச்சாட்டு..!
சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருக்கிறது என ஒரு சிலரும் இல்லை என சிலரும் கூறினாலும் உண்மை அதனை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். பலரும் மீ 2 ஹாஸ்டேக் போட்டு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறி வந்தனர். தற்போது வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமாகி ..
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. ஹிந்தியில் முன்னணி நடிகைகளின் ஒருவரான சமீரா தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், அசல் போன்ற திரைப்படங்களில். இந்த நிலையில் சமீரா ரெட்டி ஒரு பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையென யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது காரணம் அந்த தொல்லையை நான் அனுபவித்தேன். சினிமாவில் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.
ஏன் நான் கர்ப்பமாக இருக்கும் போது கூட படுக்கையை பகிர்ந்துகொள்ள சொன்னார்கள் என கூறியுள்ளார். இவர் அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!