” வாப்பா என் காதையும் வாயையும் வெட்டுவார்” தீவிரவாதி சஹ்ரானின் குழந்தையின் பதற வைக்கும் வாக்குமூலம்..
ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை “தேசிய தெளஹீத் அமைப்பின் தலைவராக இருந்த சஹ்ரான் உட்பட 9 பேர் நடத்தியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டைகளும் சோதனைகளும் இடம்பெற்று வந்தது.
இதன் போது காத்தான்குடி பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் வீட்டை சோதனையிட சென்ற போது அங்கே தீவிரவாதி சஹ்ரானின் சகோதர்களான ரில்வான், சைனி மற்றும் தந்தை ஹாசிம், இவர்களுடன் புலஸ்தினி என்கிற சாரா, மற்றும் சஹ்ரானின் மனைவி குழந்தைகள் உட்பட 17 பேர் இருந்ததுடன் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள் இதன்போது குண்டு ஒன்றை வெடிக்க வைத்த நிலையில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சஹ்ரானின் மனைவி மற்றும் சஹ்ரானின் மகள் இருவரும் காப்பாற்றப் பட்டனர்.
இந்த நிலையில் காப்பாற்ப்பட்டது சஹ்ரானின் மனைவி பாதிமா ஷாஹீதா என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்ததுடன் சஹ்ரானின் தங்கையும் உறுதி செய்தார். இந்த நிலையில் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையிடம் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குழந்தையிடம் பொலீஸார் தந்தையின் பெயரை கேட்டதற்கு தந்தையின் பெயரை கூற மாட்டேன்.
அப்பிடி சொன்னால் “வாப்பா என் இரண்டு காதுகளையும் வாயையும் வெட்டி விடுவார்” என கூறியுள்ளது. இதனை கேட்ட புலனாய்வு பிரிவினர் அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளனர். பச்சை குழந்தையை இப்படி மிரட்டும் கொடூர எண்ணம் தீவிரவாதிகளுக்கு முடிந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.!