ஈவு இரக்கம் இன்றி இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை..!!
ஈவு இரக்கம் இன்றி இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் மாவடிச்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்த 10 வயதுடைய அஸிமுல் ஹக் மற்றும் 7 வயதுடைய அஸிமுல் தாஹியா ஆகிய இரண்டு பிள்ளைகளையும் ஈவு இரக்கம் இன்றி பெற்ற தந்தையே இன்றைய தினம் (செவ்வாய்கிழமை ) தனது வீட்டு கிணற்றில் தூக்கி எரித்தார். இதனால் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை 2.00 மணியளவில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் இருந்து பிள்ளைகளை மீட்கும் போது பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். அதையடுத்து இரு பிள்ளைகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 40 வயதுடை தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.