மாணவர்களின் ஹீரோவான ஆசிரியர் பகவான் பெண்ணை ஏமாற்றியதாக பொலீஸில் பரபரப்பு புகார்..!
தமிழ் நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் அரச பள்ளி ஆசிரியர் பகவான் என்பவர் பள்ளி மாணவர்களின் ஹீரோவாக இருந்தவர் இருகின்றவர். கடந்த வருடம் வெள்ளியரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் பகவானுக்கு பணியிட மாற்றம் கிடைத்த போது பள்ளி மாணவர்கள் அவரை போக விடாமல் தடுத்ததுடன்..
கண்ணீர் விட்டு அழுததும் ஆசிரியர் பகவான் குழந்தைகளை அணைத்துக் கொண்டு அழுததும் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தையாய் நினைத்து என்றுமே திட்டாத அடிக்காத ஆசிரியரை எப்படி குழந்தைகள் செல்லவிடும் என்ற நற்பெயரோடு பெற்றோர் மனங்களிலும் இடம் பிடித்தவர் வெறும் 29 வயதான ஆசிரியர் பகவான்.
கடந்த வருடம் அவருக்கு நல்ல காலம் ஆனால் இந்த வருடம் துன்பம் என்றே சொல்ல வேண்டும். தனது மகளை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார் ஆசிரியர் பகவான் என வெள்ளியரகத்தை சேர்ந்த நாதமுனி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
கவிதா என்ற பெண்ணை வரும் 19ம் திகதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லையென ஆசிரியர் பகவான் குறித்த பெண்ணின் தந்தையிடம் கூறியதை அடுத்து மணப்பெண்ணின் பெற்றோர் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து பகவானை காவல் நிலையம் அழைத்து பொலீஸ் விசாரணை இடம் பெற்று வருகிறதாம்.!