கணவர் மற்றும் மாமியார் குழந்தை பிறந்த பின் இளம் பெண்ணுக்கு செய்த கொடுமை.!! பறிபோன தாய் மற்றும் பெண் குழந்தையின் உயிர்.!!
குற்றாலத்தில் கணவர் மற்றும் மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்த்தீபன் என்ற இளைஞருக்கும் செல்வகுமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணமாகி முதல் வருடம் மகிழ்ச்சியாக இருந்த செல்வகுமாரிக்கு லிவிஷா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்து மாமியாரான தனலட்சுமியின் தொல்லை அதிகரித்தது. பிறந்த வீட்டில் சென்று பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் சென்று வாங்கி வந்த செல்வகுமாரி பெற்றவர்கள் விவசாயிகள், அவர்களால் தினமும் பணம் தருவது கடினம் என்பதை கணவருக்கு கூறியுள்ளார். ஆனால் கணவரும் தாயுடன் இணைந்து கொண்டதுடன் 30 சவரன் நகை வேண்டும் என தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். அல்லது பிள்ளையை அடித்து துன்புறுத்துவோம், என மிரட்டியுள்ளனர்.
பெற்றவர்களிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வேறு வழியை யோசிக்க முடியாத செல்வகுமாரி குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதுடன் செல்வகுமாரி எழுதிய இறுதி கடிதத்தை கண்டெடுத்துள்ளனர்.
இதில் கணவர் மற்றும் மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக செல்வகுமாரி எழுதி இருந்ததை தொடர்ந்து இருவரையும் கைது செய்த பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.!!