பிரமாண்ட இயக்குனர் சங்கர் மீது பாடகி சின்மயி பரபரப்பு புகார்..!
சின்மயி என்றாலே சினிமா துறையை சேர்ந்தவர்கள் பயப்பட தொடங்கிவிட்டார்கள். எப்போ யார் மீது என்ன சொல்வார் என தெரியாது. காரணம் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்த கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைவரையும் அதிர வைத்தார், இதனால் தற்போது வரை இவருக்கு பாடல் வாய்ப்பு, மற்றும் டப்பிங் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் விடயங்கள் மட்டும் இன்றி அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேசி வருகிறார். ஏற்கனவே இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உட்பட பலர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார். தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.
2.0 திரைப்படத்தில் சப் டைட்டில் எழுதும் பணி செய்த ரேக்ஸ் என்ற நபருக்கு அவரது உழைப்பிற்கான ஊதியம் வழங்கப் படவில்லை என கூறியுள்ள அதே நேரம் எனக்கும் சங்கர் பணம் கொடுக்கவில்லை நான் ஐ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை, சம்பளம் தரவில்லை என கூறியதற்கு மன்னிப்பு மட்டும் தான் கேட்டார் பணம் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.