பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு மக்களால் வெளியேற்றப் பட்டவர் ஷாரிக். உமா மற்றும் ரியாஸ்கானின் மகனான ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிற்கு ஐ லைக் யூ என கூறினார், இதனால் வெடித்த பிரச்சனையால் ஐஸ்வர்யா நல்ல பிள்ளையானார்..30 வயதை தாண்டிவிட்ட ஐஸ்வர்யா தத்தா ஷாரிக் காதலிப்பதாக நினைத்துக் கொண்டதாகவும் பின் ஏமாற்றப் பட்டதாகவும் கூறினார்.
அதன் பின் அவர்கள் காதல் நிறுத்தப் பட்டது. ஆனால் ஐஸ்வர்யா வீட்டிற்குள் செய்த அத்தனை அநியாயத்திற்கும் ஷாரிக் உதவி செய்தார். இதனால் ஷாரிக் வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் 3 பார்த்த ஷாரிக் அன்று நான் இருந்த நிலையில் இன்று முகென் இருக்கிறார்.
அன்று ஐஸ்வர்யா செய்ததை இன்று அபிராமி செய்கிறார். ஐஸ்வர்யா பேசியதை மறைத்துவிட்டார்கள், அதே போல் இன்று அபிராமியின் பேச்சை மறைத்துவிட்டார்கள், அவர்களுடன் நாங்கள் நட்பு ரீதியாக பேசியவை எதுவும் வெளியே வராது, டி ஆர் பி ஏற்றுவதற்காக எங்களை பயன்படுத்திறார்கள்,
முகெனின் வாழ்க்கை தற்போது கேள்விக் குறியாக மாறிவிட்டது. வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞனை அவமான படுத்தி அனுப்பி வைக்க போகிறார்கள். என்னை பொறுத்த வரை பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றவர்களை நோகடிக்கிறது என்பது தான் உண்மை..!!