புற்று நோயால் பாதிக்கப் பட்ட மகனின் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை மக்களின் பசிக்காக கொடுத்த தந்தை..! குவியும் பாராட்டுக்கள்..!!
கடந்த வருடம் போல் இந்த வருடமும் கேரளாவை வெள்ளம் அழித்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் மண் சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காணமல் போயுள்ளனர், கேரளா பழைய நிலைக்கு வர வேண்டும் என பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தங்கள் மகனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த அனிஸ் என்பவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காப்பாற்றுவதற்காக சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த பணத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார். இது பற்றி அனீஸ் தெரிவிக்கையில் எங்கள் மகன் சிறு வயதில் மன நல பாதிக்கப் பட்டார்,
இதனால் மனமுடைந்த நாங்கள் எப்படியாவது மகனை குணப்படுத்த முயற்சி செய்தோம். இந்த நிலையில் மகனுக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும் உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர், ஆனால் என் மகனின் உயிரை விட மக்களின் பசி முக்கியமாக எனக்கு படுகிறது
அதனால் தான் எங்கள் மகனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்தோம் என கூறியுள்ள நிலையில் இதனை அறிந்துகொண்ட பலரும் அனீஸின் நல்ல மனதை பாராட்டியதுடன் , அவரது மகனின் சிகிச்சைக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர்.!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.