சிங்கப்பூரில் ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு…!!!
சிங்கப்பூரில் ஜூரோங் வெஸ்ட்டில் சட்டவிரோதமாக ரவை நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்து இருப்பதாக இருவர் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் 10 வருடங்களுக்கு பின் இதுவே முதல் முறையாகும்.
ஆயுதக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக 24 வயதுடைய முகமது அக்ராம் அப்துல் அஸாஸின் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 72 இல் அமைந்துள்ள புளோக் 731இன் மூன்றாம் தளத்தில் Shooters Sea Hawk ரகக் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதனை சட்டவிரோதமாய் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதங்களை வைத்திருந்த நபருக்கு உடந்தையாக இருந்த 25 வயதுடைய அமீருல் அஸ்ராவ் முகமது ஜுனுஸின்மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டது.
சட்டவிரோதமாக ஆயுதங்களை ஒருவர் வைத்திருந்தால் 5 முதல் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.