கொரோனா வைரஸால் குணமடைந்தவர்கான பராமரிப்பு இடமாக Singapore Expo இன்று முதல் செயல்படும்!
சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களுக்கான பராமரிப்பு இடமாக Singapore Expo சமூக நலப் பராமரிப்பு இடம் இன்று முதல் செயல்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 480 பேரைப் பராமரிக்கும் வசதி அங்கு உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். தேவை அதிகரிக்கும் போது, கட்டங்கட்டமாக அந்த வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என திரு. கான் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக் ஆளானோர், அபாயகட்டத்தைத் தாண்டி குணமடைந்த பிறகும், அவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதை இத்தகைய வசதிகள் உறுதிப்படுத்தும்.
பாசிர் ரிஸ் வட்டாரத்திலுள்ள D’Resort NTUC, முன்னரே அத்தகைய இடமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 500 பேரைப் பராமரிக்கும் வசதியுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை இல்லாத வகையில் நேற்றைய தினம் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளத்தைத் தொடர்ந்து குணமடைந்தவர்களை பராமரிக்கும் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.