சிங்கப்பூரில் புதிதாக 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19,410ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலோர் தங்கும் விடுதிகளிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்; 9 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். சுகாதார அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மேல்விவரங்களை அமைச்சு இன்றிரவு வெளியிடும்.