சிங்கப்பூரில் புதிதாக 788 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி, புதிதாக 788 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து மொத்தம் 20,198 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். 11 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனச் சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது. புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்பான மேல்விவரங்களைச் சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும்.