என் மேல பாசமே காட்ட மாட்டார்..! புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் மனைவி கண்ணீர் பேட்டி..! ஒரு நிமிடம் பாருங்களேன் .!
காஷ்மீர் புல்வாமா தாங்குதல் பற்றி நாம் பலமுறை பேசிவிட்டோம். என்ன தான் நாம் பேசினாலும் இறந்தவர்கள் மீண்டும் வரபோவதில்லை ஆனால் அவர்கள் விதையாக விழுந்துள்ளனர். அதில் இருந்து புதிய விருட்சம் மண்ணை பிளந்து வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது மரணத்திற்கு தகுந்த பதிலடி இந்திய இரணுவத்தினரால் கொடுக்கப் பட்டாகி விட்டது. இது ஆரம்பம் மட்டுமே இதற்கான தீர்வு ஒட்டுமொத்த தீவிரவாதிகளின் மரணத்தில் தான் உள்ளது. நாம் மட்டுமே பேசினால் எப்படி தன் கணவனை, தந்தையை, மகனை இழந்த குடும்பம் பேசினால்..அவர்களது வலியை நாமும் பகிர்ந்து கொள்ளலாமே.
வாங்க பார்க்கலாம். புல்வாமா தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த இருவர் வீர மரணத்தை தழுவினார்கள். அதில் சிவச்சந்திரன் அவர்களது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்..!
மகன் மரணத்தில் மற்றவர்களை போல் உடைந்து போகாத தாய் தந்தை, கணவரின் பிரிவு வாட்டி வதைத்தாலும் நாட்டுக்காக என்ற மன தைரியத்துடன் மனைவி..!
அவர் வீட்டிற்கு லீவ் ல வந்தால் கூட எங்களோட அன்பா இருக்க மாட்டார். சின்ன விடயத்திற்கும் திட்டுவார். சில நேரம் இது பற்றி அவரது நண்பர்கள் உறவுகள் கேட்டால் என் வாழ்க்கை நிலையானது கிடையாது நான் இறந்து விட்டால் அவர்களுக்கு என் இழப்பு கஷ்டம் கொடுக்கும் என்பார். இதனை அறிந்த பின் நாங்கள் புரிந்து நடந்துகொண்டோம்.
ஆனாலும் அவர் வேலைக்கு செல்லும் போது பயணம் அனுப்ப கூட எங்களை வர விட மாட்டார். அவரின் பின் நாங்கள் சென்றால் முறைத்து பார்ப்பான் அதனால் நாங்கள் திரும்பி வந்துவிடுவோம் என கண்களை துடைத்துக்கொண்டே கூறிகிறார் அம்மா.! நீங்களே பாருங்கள் நாட்டுக்காக போராடி வீர மரணம் அடைந்தவரின் குடும்பம் சொல்வதை. !
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”