லாட்டரி டிக்கெட்டில் விழுந்த 6 கோடி ரூபா.!! 1 ரூபாய் கூட எடுக்காமல் பெண் செய்த செயல்..குவியும் வாழ்த்துக்கள்!!
6 கோடி பணத்தை சொந்தமாக்கிக் கொள்ள வாய்ப்பு இருந்தும் உண்மையாக நடந்துகொண்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஸ்மிதா மோகன். இவர் அருகில் உள்ள பாக்கியலட்ஷ்மி லாட்டரி ஏஜென்சியில் லாட்டரி டிக்கெட் விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்மிதாவின் கைராசி என பலர் அவரிடமே டிக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதில் ஒருவர் சந்திரன். கோடை கால பம்பர் பரிசு 6 கோடி என அறிவிக்கப் பட்ட நிலையில் ஸ்மிதா மோகனிடம் தினமும் டிக்கெட் வாங்கும் சந்திரன் தன்னால் வர முடியவில்லை என்றும் தனக்காக டிக்கெட் ஒன்றை செலக்ட் செய்து வைக்கும் படியும் கூறியுள்ளார்.
தனது சொந்த காசை போட்டு லாட்டரி டிக்கெட் வாங்கிய ஸ்மிதா அதனை சந்திரனுக்கு என்று எடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யம் ஸ்மிதா எடுத்து வைத்த டிக்கெட்டுக்கு 6 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இதனை சந்திரன் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் தான் சந்திரனுக்காக எடுத்த டிக்கெட்டில் 6 கோடி விழுந்துள்ளதால் உடனடியாக சந்திரனுக்கு கால் செய்த ஸ்மிதா உங்கள் டிட்கெட்டுக்கு 6 கோடி விழுந்துள்ளது, டிக்கெட்டை எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். சந்திரனும் டிக்கெட்டை எடுத்து சென்றதுடன் ஸ்மிதாவின் நேர்மை பற்றி மீடியாக்களுக்கு கூறி உள்ளார்..!!