“அவர்கள் உயிருக்கு போராடும் போது என்னால் உறங்க முடியுமா ” அதிகாலை 6 மணி வரை வீதியில் அலைந்து 22 பேரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட்.!! நிஜ ஹீரோ இவர் தான்.!!
மக்கள் உயிருக்கு போராடும் போது என்னால் எப்படி உறங்க முடியும் என இரவு முழுவதும் கண்விழித்து பெங்களூர் முழுவதும் அலைந்து 22 பேரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான சோனு சூட் நிஜத்தில் ஹீரோவாக இருக்கிறார்.
கடந்த வருடம் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தனது வீட்டை அடைமானம் வைத்து கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். சோ சூட்டை மக்கள் கடவுளாக நினைக்கும் அளவிற்கு அவரது உதவிகள் இருந்தது. இதனால் அவருக்கு கோயில் கட்டி கும்பிட்டனர்.
இந்த வருடமும் தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு உதவி வந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சனைக்கு பலருக்கு நினைவு வந்த ஒரே பெயர் சோனு சூட் தான். பலரை தனது சொந்த செலவில் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்று தேவைகளையும் செய்து கொடுத்தார். ஆக்ஸிஜன் தேவைப் படுவோருக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில் சத்யநாராயணன் என்பவர் சோனு சூட்டின் அறக்கட்டளைக்கு அழைத்து அராக் மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இல்லையென்றும் அங்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இருவர் இறந்துவிட்டனர் என்றும் சுமார் 22 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் 22 பேரும் உயிர் இழக்கலாம் என தெரிவித்தார்.
இதனால் தனது நண்பர்களுடன் எப்படியாவது ஆக்ஸிஜன் தேடி அலைய ஆரம்பித்தார் சோனு சூட். இரவு இரவாக ஆக்ஸிஜன் பெற்றுக்கொள்ள கூடிய ஒவ்வொரு இடமாக சென்றார்கள். கிடைக்கும் ஒரு ஆக்ஸிஜனையும் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடும் செய்தனர். காலை 6 மணிக்கு வைத்தியசாலை கேட்ட 22 ஆக்ஸிஜனும் கிடைத்த நிலையில் உயிருக்கு போராடியவர்கள் காப்பாற்றப் பட்டனர்.
வைத்தியசாலைக்கு சென்று மக்களுக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்துகொண்ட பின்பு வீட்டுக்கு சென்றுள்ளார் சோனு சூட். இது பற்றி அவரிடம் கேட்ட போது மக்கள் உயிருக்கு போராடுவதாக வைத்தியசாலையில் கூறிவிட்டனர்.எங்களை நம்பி கூறியது நாம் காப்பாற்றுவோம் என்பதால் தான்.
அவர்கள் உயிருக்கு போராடும் போது எம்மால் எப்படி உறங்க முடியும். 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப் பட்டது, இது போதும் நிம்மதியாக உறங்குவேன் என தெரிவித்துள்ளார். “என்னா மனுசன்யா இந்தாள்” என்று மட்டுமே நினைக்க முடிகிறது.!!