பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி சாவித்திரி சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதி..! ரசிகர்களுக்கு தொடரும் சோகம்..!!
பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் இறந்து விட்டதாக பொய்யான செய்தி வெளியானது, இதனை எஸ்பிபி அவர்களின் மகனான சரண் மறுத்ததுடன் உங்கள் பிரார்த்தனைகளால் எனது தந்தை இந்த நோயில் இருந்து மீண்டும் வருவார்,
உங்களுக்காக பாடுவார் என தெரிவித்ததுடன் தவறான செய்திகளை பகிராமல் உங்கள் மனம் விரும்பிய பாடகர் மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சோகத்திலும் சோகமாக எஸ்பிபி அவர்களின் மனைவி சாவித்திரி அவர்களுக்கு நடத்தப் பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதிப் படுத்தப் பட்டுள்ளதை தொடர்ந்த்து பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி சாவித்திரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..!