புரட்டி எடுக்கும் ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?
சுயம்பரம் செய்து கொள்வதற்கு கிரக பலன் அதாவது கால நேரம் ஒத்துழைத்தால் மட்டுமே மாலை சூடவும், மணமேடை ஏறவும், திருமண வாழ்க்கையில் கால் எடுத்து வைக்க முடியும். ஜோதிடத்தில் கால நேரம் என்பது திருமண திசை என்று கூறுவார்கள். இந்த திருமண திசை ஜாதகம் செயலில் இருந்தால் மட்டுமே திருமண யோகம் கை கூடி வரும். அதன் பின் ஜாதகத்தில் குரு பலன் எப்படி இருக்கும் என்று பார்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா?
சனீஸ்வர பகவான் திருமணம் செய்ய எந்த தடையும் கொடுக்க மாட்டார், அதனால் ஏழரை சனி நடைபெறும் போதும் மாலையும் கழுத்துமாக மணமேடை ஏறலாம். ஆனால் ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்வது அனைவருக்கும் பொருந்தாது. ஏன் என்றால் ஏழரை சனி வாழும் காலத்தில் 3 சுற்றுகள் வரும். அவை மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி என்பன ஆகும். ஏழரை சனி என்பது 20 வயதிற்குள் வந்து விடும். அந்த முதல் சனி சுற்றில் திருமணம் யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் சிறிது காலம் தாழ்த்தி திருமணம் செய்வது நல்லது.
ஏழரை சனி ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி, ராசிக்கு வந்தால், அது ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வந்தால் அது குடும்ப சனி என்று கூறுவார்கள். ஒருவர் தனது ஜென்ம ராசியில் சனீஸ்வர பகவான் ஆட் கொள்ளும் போது சுயம்பரம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை, அது எந்த சுற்று சனியாக இருந்தாலும் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது சுயம்பரம் மட்டும் செய்யக் கூடாது.
ஏனெனில் அப்படி செய்தால் ஒருவரது சுயம்பர வாழ்வில் தீராத பல குழப்பங்கள் வரும். தம்பதியினருக்கு இடையில் உள்ள ஒற்றுமை குறையும். நோய்களின் தாக்கம் அதிகரிக்கும், குழந்தை பாக்கியம் இல்லாமால் போகும், மிக குறைவான மாங்கல்ய பலம் மற்றும் திருமண வாழ்க்கையின் சந்தோஷம் நீங்கி, கஷ்ட நிலைகள் அதிகரிக்கும்.