2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை…!!!
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி சென்றார். இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதியடைந்துள்ளார்.
கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் இடப்பெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில், முதலில் உக்ரைனைச் சேர்ந்த யுலியாவை 5-0 எனத் தோற்கடித்த நிலையில் வினேஷ் போகத். அடுத்ததாக, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாராவை 8-2 எனத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குள் சென்றார்.
2020 டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்த முதல் இந்திய மல்யுத்த வீரர் என்கிற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து கிரீஸைச் சேர்ந்த இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மரியா ப்ரவோலராகியைச் சந்திக்கவுள்ளார். இதில் வெல்லும் வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க உள்ளது.
வினேஷ் போகத் 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.