விஜய் டிவியின் “ஆயுத எழுத்து” சீரியலில் இருந்து நடிகை ஸ்ரீத்து வெளியேற்றப் பட்டது இதற்காக தானாம்..!! இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமோ..!?
விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களை அதிகம் கவர்ந்த சீரியலாக இருந்தது “ஆயுத எழுத்து ” சீரியல் தான். இதில் விஜய் டிவியில் ” 7சி” சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீத்து நாயகியாக ஆரம்பத்தில் நடித்தார். விஜய் டிவியில் அறிமுகமானாலும் ஸ்ரீத்து ஏற்கனவே பல சேனல்களில் சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருந்தார்.
இந்த நிலையில் ஆயுத எழுத்து சீரியலில் நேர்மையான கலெக்டராக நடித்து வந்த ஸ்ரீத்து மற்றும் அவரது ஜோடியாக நடித்த அம்ஜத் இருவரையும் வெளியேற்றி விட்டு புது நாயகன் நாயகியை விஜய் டிவி அறிமுகம் செய்தது. இது அந்த சீரியலின் வேகத்தை குறைத்தது.
இந்த சீரியலில் இருந்து ஏன் வெளியேற்றப் பட்டீர்கள் என்ற கேள்விக்கு சக்தியாக நடித்த அம்ஜத் கூறுகையில் எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்துள்ளதால் வெளியேறினேன் என சமாளித்தார். ஸ்ரீத்துவிடம் கேட்ட போது காலம் பதில் சொல்லும் என நழுவிய போதும் அவரது தோழிகளிடம்..
கேட்ட போது.. சீரியல் இயக்குனர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் வாய்ப்பு கேட்டால் நன்றாக போகும் சீரியலில் இருந்து நாயகிகளை வெளியேற்றுவது புதிதில்லை. ஸ்ரீத்துவிற்கும் அது தான் நடந்தது..
குறித்த கதாபாத்திரத்திற்கு ஸ்ரீத்து உயிர்கொடுத்துக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாமல் இருந்த போது ஸ்ரீத்துவின் நடிப்பு சரி இல்லை என கூறி அவர்களுக்கு நெருக்கியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவளவு தான் என தெரிவித்துள்ளனர்..!!