அதிமுகவின் விளம்பர வெறியால் இளம் பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு..!!!
அதிமுகவின் விளம்பர வெறியால் இளம் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அனுராதா என்ற இளம் பெண் ஒருவர் நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்தியிலிருந்து நீலாம்பூர் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கோல்டுவின்ஸ் அருகே பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீதியோரத்தில் வைக்கப்பட்ட அதிமுக கொடிக் கம்பம் சரிந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் குறித்த இளம் பெண் அனுராதா தன் மீது அதிமுக கொடிக் கம்பம் விழாமல் இருக்க பிரேக் போட்டதாகவும் அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகின்றது
அதிமுக கொடிக் கம்பம் சரிந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் தான் இந்த கொடூர விபத்து நடந்ததாகவும் அப்போது இருசக்கர வாகனத்திற்கு பின்னால் நின்ற லொறி அனுராதாவின் கால்கள் மீது எரிய போது கால்கள் நசுக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது ஏறிய லொறி ஓட்டுநர் நித்யானந்தம் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவையில் அனுராதா என்ற இளம் பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து கீழே விழுந்ததே காரணம் என்றும், அதனை பொலிஸார் முற்றாக மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றது என தெரிவித்துள்ளார் அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது வைப்பீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.