அதிமுக கொடி கம்பம் சரிந்து கீழே விழுந்ததில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம்..!! கோவையில் நடந்த சோகம்..!!!
இந்தியாவில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அனுராதா என்ற இளம் பெண் ஒருவர் நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்தியிலிருந்து நீலாம்பூர் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கோல்டுவின்ஸ் அருகே பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வீதியோரமாக வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிக்கம்பம் சரிந்து கீழே விழுந்தது அந்த நேரத்தில் குறித்த பெண் தன் மீது அதிமுக கொடிக்கம்பம் விழாமல் இருக்க பிரேக் போட்டதாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
அதிமுக கொடிக்கம்பம்சரிந்து கீழே விழுந்த அதிர்ச்சியால் தான் இந்த கொடூர விபத்து நடந்ததாகவும் அதே நேரத்தில் இருசக்கர வாகனத்திற்கு பின்னால் நின்ற லொறி அந்த இளம் பெண் அனுராதாவின் கால்கள் மீது ஏறியதால் கால்கள் நடுங்கியுள்ளது. நித்யானந்தம் என்பவரின் லொறி இருசக்கர வாகனத்தின் மீது ஏறியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு கிழக்குப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அதிமுக கொடிக்கம்பம் சரிந்து கீழே விழுந்ததில் தான் விபத்து நடந்ததாக தெரிவிப்பது முற்றிலும் பிழையான தகவல் என்று கூறியுள்ளனர். மேலும் குறித்த விபத்து தொடர்பாக லொறி ஓட்டுநரை பிடித்து விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்