“என்னை கொல்லப் போகின்றார்கள் காப்பாற்றுங்கள் ” கதறிய ரவுடி பேபி சூர்யா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
கடந்த சில நாட்களாக யூடியூப்பில் ஆபாசமாக பேசுவது குறைந்து வருகின்றது. தடை செய்யப் பட்ட VPN செயலியை பயன்படுத்தி பப்ஜி விளையாடியதுடன் மிக மோசமாக பெண்களை கொச்சை படுத்திய சர்ச்சை மற்றும் பப்ஜிக்கு அடிமையான இளைஞர்களை பின் தகாத செயல்களுக்கு பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் யூட்யூப்பர் மதன் கைது செய்யப் பட்டார்.
இவரது கைதானது மிகப் பெரிய பாதிப்பை யூடியூப்பர்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்தினார்கள். ஆபாச வார்த்தைகள் இல்லாததால் யூடியூப் வியூஸ் குறைந்து வருகின்றது. அடுத்து ரவுடி பேபி சூர்யா, மற்றும் ஜி பி முத்து கைது செய்யப் பட வாய்ப்புகள் உள்ளதாக கூறபட்டது,
இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் என்னை கொலை செய்ய சதி நடக்கிறது, தினமும் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றார்கள், இவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். ரவுடி பேபி சூர்யா கொடுத்த இந்த புகார் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.!!