” சுஷாந்தின் சிங்கின் மரணத்திற்கு உண்மையான காரணம் இந்த இரண்டு விடயங்கள் தான் ” நடிகர் பாக்கிராஜ் பேட்டி..!!
தற்போது அதிகம் பேசப் படும் செய்திகளில் ஒன்றாக இருப்பது இளம் நடிகர் சுஷாந்தின் மரணம் தான். சுஷாந்த் ஏன் இறந்தார்,? எப்படி இறந்தார் என ரசிகர்கள் கேள்வி கேட்டாலும் அவர் தூக்கிட்டுக் கொண்டதால் மூச்சுத் திணறி இறந்ததாக வைத்திய பரிசோதனையின் வெளியானது.
இந்த நிலையில் வாரிசு நடிகர்களுக்கு திரையுலகம் முன் உரிமை கொடுத்து சுஷாந்தின் வாய்ப்புகளை கெடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அனைத்துக்கும் காரணம் வாரிசு நடிகர்கள் தான் என்றும் செய்திகள் வைரலானது. இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் பாக்கியராஜ், வாரிசு நடிகர்களால் எந்த ஒரு சிறந்த நடிகரையும் அழிக்க முடியாது.
சினிமாவில் இருக்கும் அனைவருமே தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப் படுத்தவே பார்ப்பார்கள் வாரிசுகளுக்கு இலகுவாக வாய்ப்பு கிடைக்குமே தவிர திறமை இல்லாவிட்டால் நிலைக்க முடியாது. ஆனால் சுஷாந்த் சிங் அப்படி இல்லை. திறமை அழகு என கொட்டி இருந்தது.
அத்துடன் உலகம் கொண்டாடும் த தோனியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே போதும் சக நடிகர்கள் சுஷாந்தை வெளியேற்ற முயற்சி செய்வதற்கு. என்ன தான் சிரித்து கதைத்தாலும் சாதாரண நடிகரால் எப்படி இப்படி சாதிக்க முடிந்தது, இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என பொறாமை பட்டிருப்பார்கள்.
சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு இரண்டு காரணங்கள் கட்டாயமாக கூற முடியும். ஒன்று சுஷாந்துடன் நல்ல நண்பர்கள் அதாவது அவரை வழி நடத்தும் யாரும் இருக்கவில்லை. அடுத்தது குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியை சந்தித்துவிட்டார்.
இவரது வளர்ச்சியை தடுக்க ஒரு சிலர் வேணும் என்றே விமர்சனங்களை ஏற்படுத்துவார்கள் , அதனை கடந்து செல்ல சுஷாந்த் கற்றுக் கொள்ளவில்லை, கற்றுக் கொடுக்க யாரும் இருக்கவில்லை. அதனால் விமர்சனங்கள் சுஷாந்திற்கு எதிரியானது. அவரது மரணத்திற்கு இவை இரண்டுமே காரணம் என பாக்கியராஜ் மேலும் தெரிவித்துள்ளார். !!